×

தன்னை காதலிக்க வலியுறுத்தி வீடு புகுந்து தாய் முன்னிலையில் மாணவியை கையை பிடித்து இழுத்து ரகளை: கஞ்சா வியாபாரி கைது

சென்னை: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 18 வயதில் மகள் உள்ளார். அவர் அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சித்ரா மகள் கல்லூரிக்கு செல்லும் போதும், வரும் போதும், சூளைமேடு அண்ணா நெடும்பாதையை சோந்த் கஞ்சா வியாபாரியான ரஷீத்(28) என்பவர், பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும் படி தொந்தரவு ெசய்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாய் சித்ராவிடம் கூறி அழுதுள்ளார். சித்ராவும் தனது மகளிடம் தகராறு செய்யும் ரஷீத்தை நேரில் கண்டித்துள்ளார். ஆனாலும், ரஷீத் சித்ராவிடம் உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என்று கூறி மிரட்டியுள்ளார்.  இதற்கிடையே சித்ரா மகள் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் பின் தொடர்ந்து வந்த ரஷீத், ‘உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு மாணவி, ‘உன்னை போல் கஞ்சா வியாபாரியை நான் திருமணம் செய்ய மாட்டேன்..’ என கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், ரஷீத் விடாமல் மாணவியின் வீட்டிற்குள் சென்று சித்ரா முன்லையில் கஞ்சா போதையில், மாணவியை கையை பிடித்து இழுத்து திருமணம் செய்து கொள் என்று கூறி சித்ரா மற்றும் அவரது மகளையும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா நடந்த சம்பவம் குறித்து சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் ரஷீத் மீது கொல மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். ரஷீத் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது.

Tags : Ganja , Insisting her to love him, he entered the house and grabbed the hand of the student in front of her mother and dragged her away: Ganja dealer arrested
× RELATED பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா: இளைஞர் கைது