புதுடெல்லி: ஏர் இந்தியாவை வாங்கியுள்ள டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறது. விஸ்தாராவின் 51 சதவீத பங்குகளை டாடா குழுமம் வைத்துள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைப்பு குறித்து டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.