×

சட்டப்பேரவையில் ஓ. பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம்: சபாநாயகர் இன்று முடிவு

சென்னை: அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படுவதால் சட்ட பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கைக்கு அருகில் உக்காரும் ஓ. பன்னீர்செல்வம் இருக்கை மாற்றுவதை பற்றி சபாநாயகர், அப்பாவு இன்று முடிவெடுக்க உள்ளார். சட்ட பேரவை வரும் 17-ம் தேதி கூடும் நிலையில் முதல் நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள் மறைந்த தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் வாசிக்கப்படும்.

அன்று அவைகள் ஒத்திவைக்கப்பட்டு, பேரவை குடத்தை எதனை நாட்கள் நடத்துவது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வு குழு பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் கூடும். இந்நிலையில் அதிமுக உட்கட்சி பிரச்னை சட்ட பேரவையில் வடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சபாநாயகர், அப்பாவுக்கு கடிதம் எழுதிய ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால், சட்ட பேரவையில் நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறிருந்தார்.

இதையே போன்று ஓ. பன்னீர்செல்வம் பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்ததை சுட்டிக்காட்டி சபாநாயகர், அப்பாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி சட்ட பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் அனுமதிக்க வேண்டும் என்று கூறிருந்தார். அதிமுகவில் இருதரப்பினரும் போட்டிபோட்டுக்கொண்டு கடிதம் கொடுத்திருக்கும் நிலையில் சபாநாயகர், அப்பாவு எடுக்கும் முடிவை பொறுத்து இருக்கைகள் ஒதுக்கப்படும்.


Tags : Panneisselvam ,Speaker , In the Legislative Assembly, O. Panneerselvam seat change: Speaker decision today
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...