×

கவுரவ வேடங்களில் நடிப்பது ஏன்?சூர்யா விளக்கம்

சென்னை: கவுரவ வேடங்களில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்தார். மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி படத்தில் கவுரவ தோற்றத்தில் சூர்யா நடித்தார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் ஒரு காட்சியில் நடித்தார். சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இது குறித்து சூர்யா கூறும்போது, ‘நண்பரான மாதவன் கேட்டதால் சிறு வேடத்தில் ராக்கெட்ரி படத்தில் நடித்தேன்.

சூரரைப் போற்று சொந்த படம். இயக்குனர் சொன்னதால் நடித்திருக்கிறேன். நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.‘ரோலக்ஸ் மீண்டும் வருவாரா?’ என்ற கேள்விக்கு, “இதற்கு காலம் பதில் சொல்லும். படம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்” என்றார்.



Tags : Surya , Why play honor roles? Surya explains
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்