×

பாம்பன் சாலை பாலத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் மோதிய விபத்தில் 11 பேருக்கு காயம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த பாம்பன் சாலை பாலத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிகொண்டத்தில் 11 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ஆம்னி பேருந்து பாம்பன் சாலை பாலத்தில் பைக் ஒன்றை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. அதிர்ஷ்டாவசமாக தனியார் பேருந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்று விட்டது. ஒரு வேலை கடலுக்குள் பாய்ந்து இருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

விபத்தை பார்த்த அருகில் இருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். காலில் பலத்த காயத்துடன் சிக்கி தவித்த தனியார் பேருந்து ஓட்டுனரை கயிறு கட்டி இழுத்து மீட்டனர். இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரும் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்தால் பாம்பன் சாலை பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  


Tags : Pomban Road bridge , Bomban, Road, Bridge, Bus, Collision, Accident, Injury
× RELATED ராமேஸ்வரம் அருகே காரில் பதுக்கி...