×

ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 16 சவரன் நகை கொள்ளை

பெரம்பூர்: ராஜமங்கலம் பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 16 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை ராஜமங்கலம்  தென்பழனி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (80). இவர் கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிரிஜா (75). இவர்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். மேலும், கணவன், மனைவி இருவரும் சொந்த ஊரான பள்ளிப்பட்டுக்கு கடந்த 4ம் தேதி சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்க்கும்போது, ஜீவானந்தத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், உடனடியாக ஜீவானந்தம் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைத்தனர். இதுகுறித்து, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை எடுத்து கொள்ளை ஆசாமிகள் பற்றி விசாரித்து வருகின்றனர்.


Tags : Sawaran ,VAO , 16 Sawaran jewels stolen from retired VAO's house
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!