×

வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாடு தயாரா? மழைநீர் வடிகால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு மழைநீர் வடிகால்களை சீரமைக்க அரசு போர்க்கால நடவடிக்க எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ள சூழலில், வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? சென்னையில் வெள்ள நிவாரணத் திட்டங்கள் மற்றும் நீண்டகால நீர்மேலாண்மை திட்டங்கள் வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட,

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு, தங்களது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தெளிவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, மழை வெள்ளம் தங்கு தடையின்றி பயணிக்க நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வாகும். கடந்தகால அவதிகளையும், துயரங்களையும் மக்கள் மீண்டும் அனுபவிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Tamil Nadu ,Northeast ,Kamal Haasan , Is Tamil Nadu ready for Northeast Monsoon? Steps should be taken to repair rainwater drains: Kamal Haasan urges the government
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...