சென்னை: கர்மாவை மேற்கோள் காட்டி நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. கர்மா என்ற காரணத்தைக் கூறி அரசு ஊழியரின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பு வாதம் செய்தது. 18 முறை பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட காவலர் முருகன், தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். கர்மா அடிப்படையில் காவலர் முருகன் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார் எனக்கூறி பணியிட மாற்றத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி ரத்து செய்து உத்தரவிட்டார்.