×

சீர்காழி அருகே புங்கனூரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்-ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அழைப்பு

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (21ம் தேதி) காலை 10 மணி முதல் 1 மணி வரை திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெறுகிறது.முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறும் வகையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வருபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது . இந்தபணியில் சுகாதாரத்துறையினர், ஜுனைதாபேகம் கமாலுதீன் ஈடுபட்டிருந்தனர்….

The post சீர்காழி அருகே புங்கனூரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்-ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Corona Vaccine Camp-Auto ,Punkanur ,Sirkavashi ,Sirkazhu ,Municipal Union Middle School ,Seerkazhi, Mayiladuthura district ,Siragashi ,
× RELATED புங்கனூரில் நடந்த கலவரத்தில் ஒரு கண் இழந்த காவலருக்கு ₹10 லட்சம் நிதியுதவி