பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைகா நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகிற நிலையில், திரைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடரப்பட்டது.