சென்னை: தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி சென்றதாக எத்தனை லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், மனுதாரருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் செல்ல ராஜாமணி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.