காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குஜராத் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அவை நடவடிக்கைகள் ெதாடங்கியவுடன் எதிர்கட்சி தலைவரான சுக்ராம் ரத்வா, அரசு ஊழியர்கள் போராட்டம், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் பிரச்னைகள் குறித்து அரைமணி நேரம் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், சபாநாயகர் நிமாபென் ஆச்சாரியா இதற்கு அனுமதி தருவதற்கு மறுத்து விடடார்.
இதனை தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியபடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதன் காரணமாக அங்கு சலசலசப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனை ஏற்க மறுத்து அவர்கள் அமளியை தொடர்ந்ததால் கூட்டத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.