திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் பிரகாஷ் (46). பாஸ்டர். கடந்த 2016ம் ஆண்டு சர்ச்சுக்கு வந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். 12 வயது சிறுவனையும் தனது அறைக்கு அழைத்து சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார். இந்த வழக்கு மஞ்சேரி அதிவிரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல் வழக்கில் பாஸ்டர் ஜோஸ் பிரகாசுக்கு ஆயுள் சிறையும், ரூ2 லட்சம் அபராதமும் 2வது வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டு வழக்கிலும் அபராதம் கட்டவில்லை என்றால் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.