×

பலாத்காரம் செய்து சிறுமி கொலை அசாம் வாலிபருக்கு ஆயுள் முழுவதும் சிறை

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியின் உடல், கடந்த 2020ல் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி (21) என்ற வாலிபர், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மஜம் அலியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பூர்ணஜெயானந்த், மஜம் அலியை ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கவும்உத்தரவிட்டார். 


Tags : Assam , Assam youth gets life imprisonment for raping and murdering girl
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...