ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கர், மணிகண்டன், இணைச்செயலாளர்கள் குணசேகரன், திருவேங்கடம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் , முனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.