×

நடிகை பவுலினா ஜெசிகா தற்கொலையில் திடீர் திருப்பம்; கதாநாயகியாக நடிக்க வைப்பதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிவிட்டாரா?: சினிமா இயக்குநரிடம் போலீசார் விசாரணை

சென்னை: நடிகை பவுலினா தற்கொலையில் திடீர் திருப்பமாக, காதல் இயக்குநர் ஒருவர் ‘ நடிகை பவுலினாவை கதாநாயகியாக வைத்து படம் எடுப்பதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து ஏமாற்றி விட்டதால் தற்கொலை முடிவுக்கு சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனது தங்கையை பயன்படுத்தி ஐ-போனை எடுத்து சென்ற இயக்குநர் நண்பரிடம் இருந்து மீட்டு தர கோரி சகோதரன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் சத்திவேடை பகுதியை சேர்ந்தவர் பவுலின் ஜெசிகா(எ) தீபா(29). இவர் சிறு வயதில் நடிப்பில் தனித்திறமை கொண்டவராக இருந்துவந்துள்ளார். பிறகு பட்டப்படிப்பு முடித்த உடன் ஆந்திராவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அப்ேபாது, ஜெசிகா தனது நடிப்பு திறமையை ‘டிக் டாக் மற்றும் இன்ஸ்ட்ரா ரீல்ஸ்’ மூலம் வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

பிறகு தனது டிக்டாக் நடிப்பின் மூலம் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை இயக்குநர்கள் மத்தியில் பேசப்படும் நபராக இருந்துள்ளார். இதனால் அவருக்கு சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தங்கி நடித்து வந்தார். அந்த வகையில், ‘ராட்சசன், தெறி, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பு திறமையை ஜெசிகா வெளிப்படுத்தியதால், அவருக்கு ‘வாய்தா’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஓடிடியில் வெளியான அந்த திரைப்படம் நல்ல வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக நடித்த பிறகு ஜெசிகா சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்காமல் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கவே விரும்பினார். அதற்காக பல இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு அவர் நாடியுள்ளார். அவர்களும் நல்ல கதையில் ஹீரோயினாக வாய்ப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை நடிகை ஜெசிகா தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் ஜன்னல் கம்பியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் படி கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடிகையின் அறையில் போலீசார் சோதனை செய்த போது, கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் ‘ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். எனது காதல் கைக்கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்.  எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது.  பின்னர் போலீசார் நடிகை ஜெசிகா தற்கொலை சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஜெசிகா தற்கொலை குறித்து போலீசார் கூறியதாவது: நடிகை ஜெசிகா கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இவர், பணம், அரசியல், சமூக அந்தஸ்து கொண்ட நபர்களுடன் நல்ல நட்பில் இருந்து வந்துள்ளார். ஜெசிகா வாய்தா படத்தில் நடிகையாக நடித்ததால், அந்த படத்திற்கு பிறகு வேறு படங்களில் அவர் துணை நடிகையாக நடிக்க விரும்பவில்லை. ஜெசிகாவுக்கு திரைப்பட துணை இயக்குநர் ஒருவருடன் நல்ல நட்பு இருந்தது. அந்த துணை இயக்குநர் திருமணம் நடந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் ஜெசிகாவை ஹீரோயினாக வைத்து படம் எடுப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

அதனால் நடிகை ஜெசிகாவும், அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த நட்பால் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். தனது புதுப்படத்தின் நடிகை என்பதால் பல இடங்களுக்கு அந்த துணை இயக்குநருடன் சென்று வந்துள்ளார். பல நேரங்களில் வெளியில் இருவரும் தங்கி உள்ளனர். தன் மீது துணை இயக்குநர் மிகுந்த அன்பாக இருப்பதால், நடிகை ஜெசிகாவுக்கு துணை இயக்குநர் மீது காதல் வந்துள்ளது. அந்த காதலால் துணை இயக்குநர் எப்போது அழைத்தாலும் நடிகை ஜெசிகா உடனே சென்றுவிடுவார். அதேநேரம் துணை இயக்குநரை அவர் காதலிப்பதாக அவரிடம் கூறியுள்ளார். முதலில் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அப்போது இருவரும் பல நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு நடிகை ஜெசிகா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி துணை இயக்குநரிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர், எனக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கிறது. நீ சின்ன வயது பெண், உனக்கு வாழ்க்கை இருக்கிறது என்று அறிவுரை கூறி திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், நடிகை ஜெசிகா தனது காதல் இயக்குநருடன் தொடர்பில் தான் இருந்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தனது காதல் இயக்குநருடன் வெகு நேரம் செல்போனில் நடிகை ஜெசிகா பேசி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் திருமணம் செய்வதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு துணை இயக்குநர் போனை துண்டித்துவிட்டார். அதன் பிறகு நடிகை தனது அறையில் வெகு நேரம் துணை இயக்குநரை தொடர்பு கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர், நடிகையின் போனை எடுக்கவில்லை. அதன்பிறகு தான், ஒருதலையாக காதலித்த இயக்குநருக்கு தான் தற்கொலை ெசய்து கொள்ள போகிறேன் என்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த துணை இயக்குநர், உடனே தனது நண்பரை நடிகை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அவர் வந்து பார்த்த போது, வீட்டின் கதவி உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. பல முறை கதவை தட்டியும் நடிகை திறக்கவில்ைல. இந்த தகவலை இயக்குநருக்கு அவரது நண்பர் தெரிவித்தார்.

பிறகு தான் இயக்குநர் நடிகை வசித்து வரும் வீட்டின் உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை கூறி அனுப்பியுள்ளார். அவரும் வந்து பார்த்த போது தான் நடிகை ஜெசிகா தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. நடிகை 3 செல்போன்கள் பயன்படுத்தி வந்ததாக அவரது சகோதரன் தெரிவித்துள்ளார். அதில் சினிமா வட்டாரத்திற்கு மட்டும் பயன்படுத்தும் ஐ-போன் மட்டும் மாயமாகி உள்ளது. அந்த ஐ-போனை கண்டுபிடித்தால் எனது தங்கை சாவுக்கு காரணம் என்ன என்று தெரியும் என்று புகார் அளித்துள்ளார். அதன்படி நாங்கள் மாயமான ஐ-போன் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

அதேநேரம், நடிகை ஜெசிகா பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்த போது, காதலித்து வந்த தனது துணை இயக்குநருடன் தான் வெகு நேரம் பேசியது உறுதியாகி உள்ளது. அதன் பிறகு நடிகை செல்போனில் இருந்து எந்த அழைப்பு செல்லவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் நடிகை ஜெசிகா தற்கொலைக்கு துணை இயக்குநருக்கு தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் நாங்கள் துணை இயக்குநரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதேநேரம் நடிகை சகோதரன் அளித்த புகாரின் படி மாயமாக ஐ-போன் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்கள் மற்றும் முதற்கட்டவிசாரணையில், துணை இயக்குநர் நடிகை ெஜசிகாவை வைத்து தனியாக சினிமா எடுக்க முடிவு செய்து அவருடன் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்துள்ளது. தற்போது துணை இயக்குநரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிந்த பிறகு தான் நடிகை தற்கொலைக்கு யார் காரணம் என்று தெரியவரும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Paulina Jessica , Actress Paulina Jessica takes a sudden turn in suicide; Did he flirt and cheat to play the heroine?: Police interrogated the film director
× RELATED நடிகை பவுலினா ஜெசிகா தற்கொலையில்...