×

நடிகை சர்மிளா மந்த்ரே தயாரிப்பில் மீண்டும் ஜோடி சேர்ந்த காளிதாஸ், துஷாரா

சென்னை: தமிழில் சித்தார்த், அமலா பால் நடித்த ‘காதலில் சொதப்பு வது எப்படி’, துல்கர் சல்மானுடன் நஸ்ரியா நடித்த ‘வாயை மூடி பேசவும்’, தனுஷுடன் காஜல் அகர் வால் நடித்த ‘மாரி’, தனுஷுடன் சாய் பல்லவி நடித்த ‘மாரி 2’ ஆகிய படங்களை இயக்கியவர்,  பாலாஜி மோகன். தற்போது அவர் இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம், அமலா பால், துஷாரா விஜயன் நடிக்கின்றனர். ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை தொடர்ந்து காளிதாஸ்  ெஜயராம், துஷாரா விஜயன் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது. இப்படத்துக்கு ‘காதல் கொஞ்சம் தூக்கலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சாரதா சுப்ரமணியன் எழுதிய ‘மேக் இட் 2’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது.

கன்னட நடிகை சர்மிளா மந்த்ரே தயாரிக்கிறார். தமிழில் விநய்யுடன் ‘மிரட்டல்’ படத்தில் நடித்துள்ள அவர், விமலுடன் ஆஷ்னா சவேரி நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, அட்டகத்தி தினேஷ், தீப்தி நடித்த ‘நானும் சிங்கிள்தான்’ ஆகிய தமிழ்ப் படங்களை தயாரித்தார்.  தற்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி’ என்ற படத்தை தயாரிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார். இவர் ‘ராஜதந்திரம்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்துக்கு இசை அமைத்தவர். ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தை இயக்கியவர். காளிதாஸ் ஜெயராம் கூறுகையில், ​‘பாலாஜி மோகன் படத்தில் நடிப்பது நல்ல அனுபவம். இது காதல் கதையுடன் உருவாகிறது. அமலா பால், துஷாரா போன்ற திறமையான கலைஞர்களுடன் பணியாற்றுவது பெருமகிழ்ச்சி  அளிக்கிறது’ என்றார்.

Tags : Sharmila Mandre ,Kalidas ,Dushara , Actress Sharmila Mandre has teamed up again with Kalidas, Tushara
× RELATED மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக...