திருவொற்றியூர்: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 14 தொடக்க பள்ளி மாணவர்கள் 1,606 பேருக்கு காலை உணவு தயாரிக்க எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.19.41 லட்சம் செலவிலும், தாழங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவிலும் நவீன சமையல் கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு நிகழ்ச்சி மண்டல உதவியாளர் சங்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு சமையல் கூடங்களை திறந்து வைத்து பள்ளி சிறார்களுக்கு காலை உணவு கொண்டு செல்லும் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர், மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து பூந்தோட்ட பள்ளி சிறார்களுக்கு காலை சிற்றுண்டி, பேனா, பென்சில், நோட்டு புத்தகம், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்ற கல்வி உபகரணங்களை தி.மு.தனியரசு வழங்கினார். கவுன்சிலர்கள் சிவகுமார், தமிழரசன், திமுக நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், வி.கே.ஏழுமலை, தியாகராஜன், எம்.வி.குமார், ஆசைத்தம்பி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.