×

நூற்றாண்டு பழமையான கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தை காலி செய்ய கூறி மிரட்டுவதாக புகார்

குன்னூர்: குன்னூரில் நூற்றாண்டு பழமையான கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை காலி செய்ய கூறி மிரட்டுவதாக கூறி கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டம் ெசய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியில் 105 வருட காலமாக கிறிஸ்தவ மக்களின் பார்ப்பரம்மாள் குருசடி திருச்சபை உள்ளது. இங்கு அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் சென்று  பிரார்த்தனை செய்து வருகின்றனர். சமீபகாலமாக, ஒரு சிலர் இந்த ஆலயத்தை விலைக்கு வாங்கி விட்டதாக சொல்லி காலி செய்யுமாறு தொந்தரவு செய்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக, அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக மனு அளிக்கப்பட்டது இருப்பினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதைக்கண்டித்து நேற்று அப்பகுதி மக்களுடன் திருச்சபை மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். மாவட்ட நிர்வாகமும், வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Christian , Complaint of threatening to vacate century-old Christian place of worship
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்