×

நிச்சயதார்த்தம் ஆன பெண் காரில் கடத்தல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் காரில் கடத்தி செல்லப்பட்ட சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி அருகே தட்டப்பாறை பகுதியை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண்ணுக்கும், கோவில்பட்டியை சேர்ந்த ராகவன் என்பவருக்கும் இடையே கடந்த 7-ம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதை முன்னிட்டு எல்லம்மாள் தான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் வெள்ளையென்னை எழுதிகொடுக்க சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டுருந்த போது அங்கே வந்த கார் ஒன்று எல்லம்மாளை அங்கே இருந்து கடத்தி சென்றுள்ளது.

இதனை நேரில் பார்த்த சிலர் எல்லம்மாள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தொடர்பாக தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு சரியான விசாரணை செய்யாத காரணத்தினால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் எல்லம்மாள் பணியாற்றி வந்த நிறுவனத்தில் சோலையப்பன் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அந்த நபரே கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளார். 


Tags : Thuthukudi , Betrothed woman kidnapped in a car: stir near Tuticorin
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி