×

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருவேங்கடம் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருவேங்கடம் மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒன்றிணைந்த வடார்க்காடு மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடியும் கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளருமான  திரு. பெ.சு.திருவேங்கடம் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தாம் கழகத்துக்காக ஆற்றிய பணிகளுக்காக 2017-ம் ஆண்டு முப்பெரும் விழாவில் அண்ணா விருது பெற்ற பெருமைக்குரியவர் பெ.சு. திருவேங்கடம் அவர்கள். அவரை இழந்து வாடும் அவரது மகன் - கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருவேங்கடம் மறைவு:

திமுக சொத்து பாதுகாப்பு குழு செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக மூத்த முன்னோடியுமான பெ.சு.திருவேங்கடம் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், பெரியகிளாம்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


Tags : Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stal ,legislator ,Thiruvenkadam , Former Member of Legislative Assembly, Thiruvenkadam, passed away, M.K.Stalin
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...