×

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; சென்னைக்கு கடத்தி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பத்தனம்திட்டாவை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை சென்னைக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வளயநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாசில் (26). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாசிலுக்கு பத்தனம்திட்டாவை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் மிகவும் நெருக்கமானார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி பிளஸ் 1 மாணவி திடீரென மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பத்தனம்திட்டா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். தீவிர விசாரணையில் மாணவி பாசிலுடன் சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் நடத்திய விசாரணையில் 2 பேரும் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சென்னைக்கு விரைந்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து மாணவியை போலீசார் மீட்டனர். பாசிலை கைது செய்தனர். விசாரணையில் மாணவியை பாசில் லாட்ஜில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்த விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Chennai , Habits through Instagram; Kidnap girl to Chennai and rape: Youth arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...