சென்னை: சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் பெரியார்நகரில் ஜெயசீலன் என்பவர் வீட்டில் 92 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஜெயசீலன் தனது சொந்த ஊரான சிவகங்கைக்கு சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துள்ளனர். தாம்பரத்தில் டேக்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வரும் ஜெயசீலன் வீட்டில் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.