×

220 கிலோ குட்கா பறிமுதல்

அம்பத்தூர்,: ஆட்டோவில் கடத்தி வந்த குட்கா பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர் அருகே வெங்கடாபுரத்தில் குட்கா விற்கப்படுவதாக அம்பத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம்  போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஆட்டோவை மடக்கினர். அதில் 22 மூட்டைகளில் 220 கிலோ குட்கா இருந்தது.

அதில் ராமாபுரத்தை சேர்ந்த அப்பாஸ் (39), திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த வாசுதேவன் (35)  என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து ஆட்டோவுடன் குட்காவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : 220 kg gutka seized
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...