கிபித்து: இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத், கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஹெலிகாப்டரில் விபத்தில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம் கிபிது ராணுவ முகாமில் நடந்த விழாவில், சீனா உடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள லோஹித் பள்ளாத்தாக்கில் வாலோங்கில் இருந்து உள்ள கிபிது ராணுவ முகாம் வரை உள்ள 22 கி.மீ தூரம் சாலைக்கு ‘பிபின் ராவத் மார்க்’ என பெயர் சூடப்பட்டுள்ளது. மேலும், கிபிது ராணுவ முகாம் ‘ஜெனரல் பிபின் ராவத் மிலிட்டரி கேரிசன்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.