×

தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள்: தமிழக பாஜ தலைவர் அறிவிப்பு

சென்னை: தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், தன்னுடைய இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனின் 65ம் ஆண்டு குருபூஜை விழா செப்டம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது.  தமிழக பாஜக சார்பில் மாநில பொது செயலாளர் பொன்.பாலகணபதி தலைமையில் பொறுப்பாளர்கள் மாநில அளவில் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில பொது செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், இராம ஸ்ரீநிவாசன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் அஸ்வத்தாமன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், எஸ்.சி.அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் கே.மாணிக்கம், பொருளதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் நீல முரளியாதவ் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

Tags : Martyr Emmanuel Sekaran ,Gurupuja ,Tamil Nadu ,BJP , State in-charges to participate in Martyr Emmanuel Sekaran Gurupuja: Tamil Nadu BJP president announcement
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...