×

சென்னை திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: பழிக்கு பழியா? என போலீசார் விசாரணை

சென்னை: சென்னை திருவான்மியூரில் பிரபல ரவுடியான ஓலை சரவணன் அவருடைய மனைவியின் கண்முன்னே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 36 வயதான சரவணன் என்ற ஓலை சரவணன் சென்னை திருவான்மியூர் திருவீதி அம்மன் கோயிலை சேர்ந்தவர். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கு ஒன்றில் கைதாகி இருந்த ஓலை சரவணன் 2 மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தார். நேற்று இரவு 7 மணியளவில் தன்னுடைய மனைவி ரெபேக்கா உடன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பாரதிதாசன் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பு அருகே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் ஓலை சரவணனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதில் நடந்த இந்த கொலை அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. கொலையாளிகள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். 2018ம் ஆண்டு அடையாறில் சுரேஷ் என்பர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஓலை சரவணன் முக்கிய நபராவார். எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.     


Tags : Chennai Thiruvanmyur , Chennai, Thiruvanmiyur, famous rowdy, beheading, blame for blame, investigation
× RELATED திருவான்மியூர் ரயில் நிலைய...