நெல்லை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பது பேரவை நடக்கும் போது தெரியவரும் என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லையில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்காக அதிமுக ெகாறடா அளித்துள்ள மனு குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. சட்டப்பேரவை நடக்கும் போது அது குறித்து தெரியவரும். இவ்விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக அடிப்படையில் முடிவுகள் இருக்கும்’’ என்றார்.