×

சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”அமைப்பு: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; Youtube Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி அதன்மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள்” அமைக்கப்பட்டுள்ளன. கணினிசார் திறன் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இக்குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும்,

அவர்களின் சமூக ஊடகக் கணக்குளை முடக்கவும், கணினிசார் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கும் இக்குழு துரிதமாக செயல்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : DGB ,Sylendrababu , Police set up 'social media squads' to track rumor mongers on social media: DGP Sailendrababu
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு