சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரி வரும் 12ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் செப்டம்பர் 13ம் தேதி முதல் அவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என கிரண் ரிஜூஜூ தகவல் தெரிவித்தார்.