×

பெரியாறு அணையின் நீர்மட்டம் ‘கிடுகிடு’

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 5,488  கனஅடியாக அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 134 அடியை கடந்தது. நேற்றைய  நிலவரப்படி 152 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 134.10 அடியாக  இருந்தது. இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1,867 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பிலுள்ள பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 5 மாதங்களுக்குப்பின் நேற்று முதல் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது….

The post பெரியாறு அணையின் நீர்மட்டம் ‘கிடுகிடு’ appeared first on Dinakaran.

Tags : Goriyaru dam ,Cuddalore ,Periyaru Dam ,Gigaru Dam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை