திண்டுக்கல்: கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் கனமழையால் வட்டக்கானல் மற்றும் பாம்பார்புரம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேரி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அருவி அருகே புகைப்படம் எடுப்பதால் தடுப்பு கம்பிகள் அமைக்க சமூக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.