விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்று இவ்வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடந்தது.
அப்போது நீதிமன்றத்தில் மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதுசம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா என்றும் நீதிபதி கேட்டார். அதற்கு அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுரை தெற்கு மண்டல கலால் பிரிவு எஸ்பி வருண்குமார், பெரம்பலூர் போலீஸ் வினோத்குமார் ஆகிய இருவரும் சாட்சியம் அளித்தனர்.