×

குமரி பங்களாவில் ஜாயின்ட் சரக்கு பார்ட்டி கல்லூரி மாணவியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி ரகசிய விசாரணை

குமரி பங்களாவில் ஜாயின்ட் சரக்கு பார்ட்டி கல்லூரி மாணவியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி ரகசிய விசாரணை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பங்களா வீட்டில் நடந்த ஜாயின்ட் சரக்கு பார்ட்டியில் பங்கேற்றவர்கள் யார், என்பது பற்றி கல்லூரி மாணவியிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி உள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சமீபத்தில் பங்களா வீட்டில், கல்லூரி மாணவி ஒருவர் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடினார். இந்த பார்ட்டிக்கு அழைக்கப்படாத, கல்லூரி மாணவியின் முன்னாள் காதலன், மரம் ஏறி குதித்து பங்களா வீட்டுக்குள் நுழைந்தார்.

பின்னர் ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை தாக்கினார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது மாஜி காதலனை தேடி வருகிறார்கள். போலீஸ் விசாரணை நடந்து வந்த நிலையில், சம்பவம் நடந்த பங்களா வீட்டில் கல்லூரி மாணவிகள், தங்களது ஆண் நண்பர்களை வரவழைத்து மது அருந்தி பின்னர் தனக்கு விருப்பமானவர்களுடன் மாறி, மாறி உல்லாசமாக இருப்பார்கள் என்பது தொடர்பான ஒரு ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.

ஜாயின்ட் சரக்கு பார்ட்டி என்ற பெயரில் ஒன்று கூடும் மாணவிகள், மது அருந்தி ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பதுடன், அடிக்கடி நண்பர்களையும் மாற்றி, மாற்றி சந்தோசமாக இருப்பார்கள் என்றும் உரையாடல் பதிவில் தெரிவிக்கப்பட்டது. இந்த உரையாடலில் பேசிய கல்லூரி மாணவி, தோழி ஒருவரின் வற்புறுத்தலால் தானும் ஒருமுறை இந்த ஜாயின்ட் பார்ட்டியில் பங்கேற்றதாகவும், தவறை உணர்ந்து தற்போது அங்கு செல்வதில்லை என்றும் கூறி இருந்தார். இந்த உரையாடலுடன், அந்த பங்களா வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் என்பதற்கான வீடியோவும் வெளிவந்தது.

அந்த வீடியோவில் அந்த வீட்டில் ஆணுறைகள், மது பாட்டில்கள், சிகரெட்டுகள், போதை வஸ்துக்கள் இருந்தன. தனித்தனி அறைகளில் படுக்கைகள் இருந்தன. அதில் ஆண்கள், பெண்களுக்கான ஆடைகளும் கழற்றி போடப்பட்டு கிடந்தன. இந்த வீடியோ மற்றும் செல்போன் உரையாடல் பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. கல்லூரி மாணவிகள், ஆண் நண்பர்களை வரவழைத்து மது விருந்து அளித்து உல்லாசமாக இருந்தனர் என்ற தகவலை கேட்டதும் பல பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இந்தளவுக்கான சமூக சீரழிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார்.

அதன்படி தாக்குதல் நடந்த அன்று பங்களா வீட்டில் இருந்த மாணவர்கள், மாணவிகள் யார்? யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் சென்று விசாரணை நடந்தது. ஆனால் யாரும் இது பற்றி வாய் திறக்க வில்லை. தற்போது மாணவியை தாக்கிய மாஜி காதலன் தலைமறைவாக உள்ளார். சம்பவத்தன்று நடந்த லீலைகளை வீடியோவாக செல்போனில் பதிவு செய்ததாகவும், அதில் மாணவிகள் மற்றும் அவர்களின் ஆண் நண்பர்கள் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் எங்கிருக்கிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் மாஜி காதலன் பிடிபட்டால் இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசாரும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள். பங்களா வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான மாணவி, போதகரான அவரது தந்தையிடம் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் வரை விசாரணை நடந்து உள்ளது.

அப்போது சமூக வலை தளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை ஆகும். கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பார்ட்டியை திசை திருப்புகிறார்கள். எந்த தவறும் நடக்க வில்லை என கூறி உள்ளனர். அப்போது சில வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸ் தரப்பில் காட்டி உள்ளனர். அதற்கு எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி, மாணவிகள், இளம்பெண்களுடன் பழகி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணமும் பறித்தார். இந்த வழக்கும் சிபிசிஐடி வசம் தான் உள்ளது. இந்த நிலையில் தற்போது மாணவிகளின் ஜாயின்ட் சரக்கு பார்ட்டி விவகாரமும் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.


Tags : CPCID ,Jointed Freight Party College ,Kumari bungalow , CBCID undercover interrogation of joint cargo party college student at Kumari bungalow for 2 hours
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...