புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜ தலைவராக இருந்த ஸ்வதந்தரா தேவ் சிங்கிற்கு பதிலாக புபேந்தர் சவுத்ரியை மாநில தலைவராக பாஜ தலைமை நியமித்துள்ளது. இவர் மாநில கேபினட் அமைச்சராக உள்ளார். சவுத்ரியை நியமித்ததன் மூலமாக, ஜாட் சமூகத்தை சேர்ந்தவர், பாஜ.வின் தலைவராக உள்ள 3வது மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது.