சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது:
பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்கு வண்டியில் கடத்தி வரப்பட்ட 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. கஞ்சா வலைப்பின்னலை கண்டறிந்து அதை அடியோடு ஒழிப்பது தான் கஞ்சா போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த உதவும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.