×

பைனான்சியர் கொலை வழக்கில் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 பேர் சரண்

நாகை: வேளாங்கண்ணியில் நடந்த பைனான்சியர் கொலை வழக்கில் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 பேர் சரணடைந்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மனோகர்(40). இவரது சகோதரர் ரமேஷ். இவர், நாகை தெற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளர். வேளாங்கண்ணியில் பைனான்ஸ் மற்றும் விடுதிகளை மனோகர் நடத்தி வந்தார். இவரது அலுவலகம் வேளாங்கண்ணி முச்சந்தி அருகில் உள்ளது. கடந்த 17ம் தேதி இரவு மனோகர் தனது நண்பர் மணிவேலுடன் அலுவலகத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

அப்போதுஅலுவலகத்துக்கு வெளியை பைக்கை நிறுத்திவிட்டு மர்மகும்பல் உள்ளே புகுந்து மனோகரை வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மனோகர் கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு கோர்ட்டில் மதியழகன், விஜய், ரமேஷ், அருளரசன் ஆகிய 4 பேர் சரணடைந்தனர். இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சென்னையை சேர்ந்த காசி, சுசீந்திரன் ஆகியோர் நேற்று சரணடைந்தனர்.


Tags : Chennai Saithappet court ,Binansier , 2 people surrendered in Saitappettai court in Chennai in financier's murder case
× RELATED பைனான்சியர் கொலை வழக்கில் கோர்ட்டில்...