×

5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குண்டும் குழியுமான நாவலூர் - தாழம்பூர் சாலை; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான நாவலூரை ஒட்டி தாழம்பூர், சிறுசேரி, காரணை, பொன்மார், போலச்சேரி, புதுப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி என்பதால் இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், வீட்டு மனைப்பிரிவுகள் உருவாகி வெகு வேகமாக இப்பகுதி வளர்ந்து வருகிறது. மேலும், இந்த சாலையில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பள்ளிகள் போன்றவையும் உள்ளன. நாவலூரில் இருந்து தாழம்பூர் வழியாக செல்வதற்கு உள்ள இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போட்டப்பட்டது.

ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப்பணி நடைபெறுவதால் தினந்தோறும் மணல், செங்கல், தண்ணீர், கழிவு நீர் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் இவ்வழியே செல்கின்றன. மேலும், இக்கிராமங்களில் குடியிருப்போர் சென்னை செல்வதற்கும், சிறுசேரி சிப்காட் செல்வதற்கும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். அதிக வாகனப் போக்குவரத்தால் இச்சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இவற்றில், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இச்சாலையானது மாவட்ட நெடுஞ்சாலைத்துறை வசம் இருந்தாலும் அத்துறை சார்பில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் யாரும் எட்டிப் பார்ப்பது கூட இல்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Tags : Nawalur-Dhalampur road , Nawalur-Dhalampur road potholed 5 years ago; Public demand for renovation
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...