தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 2.2 கிலோ கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் போலீசார் வாகான சோதனையில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் கஞ்சா இருந்தது சோதனையில் தெரிய வந்தது.