×

அம்மன் வீதி உலாவில் லாரி புகுந்து; 2 பேர் பலி 10 பேர் படுகாயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் தில்லாரஅள்ளி கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரி, திடீரென தாறுமாறாக ஓடி அந்த பகுதியில், சுவாமி திருவீதி உலா வந்த கூட்டத்திற்குள் புகுந்தது.

இதில் மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த  12 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி, கோவிந்தம்மாள் ஆகியோர் நேற்று அதிகாலை உயிரிழந்தனர். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : Lorry ,Amman Road , Lorry rammed Amman Road; 2 killed and 10 injured
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது