×

33 அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 15 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் 50% மானியத்தில் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: 33 அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 15 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் 50% மானியத்தில் விற்பனை செய்யப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை: மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் அறுவதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, சிவப்பு கவுனி, சிவன் சம்பா, தங்க சம்பா, தூயமல்லி, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை என்ற நோக்கத்தில் அரசு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 33 அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் மேற்கண்ட 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.மேலும்50 சதவீத மானியத்தில், அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.12.50 என்ற மானிய விலையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகள், 20 கிலோ  வழங்கங்படும்.

Tags : Minister ,MRK Panneerselvam , 15 Traditional Rice Varieties Produced in 33 Government Seed Farms Sold at 50% Subsidy: Minister MRK Panneerselvam Information
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...