×

ஸ்டெர்லைட் ஆலை விற்பனையை எதிர்த்த மனு ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மதுரை:  ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு எதிரான மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. நெல்லையைச் சேர்ந்த எஸ்.பி.முத்துராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆலையை விற்பனை செய்வது தொடர்பாக ஆலை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஆலைக்கு இடம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதே நேரம் சிப்காட் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி, சிப்காட் தரப்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை.

சிப்காட்டால் வழங்கப்பட்ட நிலத்தை மற்றவர்களுக்கு மாற்றம் செய்வது தொடர்பாக சிப்காட் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் அதுபோல் முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா ஆகியோர், இந்த மனு ஏற்புடையதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தனர். மனுதாரர் தரப்பில் உரிய இடத்தில் முறையிட்டு பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

Tags : Court dismisses plea challenging sale of Sterlite plant
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...