சென்னை: நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்த உயர்கல்வித்துறை திட்டம். ஆக்ஸ்ட் 16 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட உயர்கல்வி திட்டமிட்டுள்ளது. நீட் முடிவுக்கு பின் பலமாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது.