×

டூவீலர்களில் மது வாங்கி வந்த 3 தொழிலாளிகள் லாரி மோதி பலி

தர்மபுரி: தொப்பூரிலிருந்து சேலத்திற்கு டூவீலர்களில் மது பாட்டில்கள் வாங்கிவந்தபோது, லாரி மோதி 3 பேர் உயிரிழந்தனர். தர்மபுரி: சேலம் மாவட்டம், இடைப்பாடி வேப்பமரத்தூர் பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளர்கள் சாமிநாதன் (33), செல்வராஜ் (37), ஈஸ்வரன் (38), ராஜூ (40). நண்பர்களான இவர்கள், இங்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள கடைக்கு நேற்று 2 டூவீலர்களில் சென்றனர். அங்கு மது பாட்டில்கள் வாங்கி ஒரு பையில் வைத்துக்கொண்டு, சேலம் திரும்பியபோது, தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே கோதுமை மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காமல் இவர்களது 2 டூவீலர்கள் மீது மோதியது. இதில் சாமிநாதன், செல்வராஜ், ஈஸ்வரன் ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர். ராஜூ படுகாயமடைந்தார். அந்த லாரி மற்றொரு லாரி மீது மோதி நின்றது. இதில், 2 லாரி டிரைவர்களும் காயம் அடைந்தனர். …

The post டூவீலர்களில் மது வாங்கி வந்த 3 தொழிலாளிகள் லாரி மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Thoppur ,Saleam ,Salem District ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...