×

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 12 டிஎஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 12 டிஎஸ்பிக்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள உத்தரவு: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஞான ரவி தங்கத்துரை தேனி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், சண்முகம் சேலம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், சசிகுமார் ஈரோடு அதிரடிப்படை டிஎஸ்பியாகவும், ராஜபாண்டியன் கோவை மாவட்டம் பேரூர் டிஎஸ்பியாகவும், சீனிவாசன், சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், குமார் கோவைபுதூர் உதவி கமாண்டன்ட்டாகவும், தமிழ்மணி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாகவும், வெற்றிச்செல்வன், கோவை குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, சந்திரசேகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டிஎஸ்பியாகவும், ரமேஷ் மதுரை சிறப்புக்காவல்படை 6வது பட்டாலியன் டிஎஸ்பியாகவும், பால்பாண்டி ராமநாதபுரம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகேஷ்வரன் நீலகிரி டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி, காத்திருப்போர் பட்டியலுக்கு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர் மீண்டும் நீலகிரி டவுன் டிஎஸ்பியாக பணியை தொடருவார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : DGP Sailendrababu , Transfer of 12 DSBs in waiting list: DGP Sailendrababu orders
× RELATED கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு