சென்னை: மருத்துவ கலந்தாய்வை போலவே பொறியியல் கலந்தாய்வையும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பொறியியல் சேர்க்கை சேவை மைய பணியார்களுக்கான பயிற்சி அண்ணா பல்கலைக்கழத்தில் நேற்று நடைபெற்றது. இவர்களுக்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் பயிற்சியளித்தர்.
இதில் புதிய நடைமுறைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. பொறியியல் படிப்புகளில் காலியிடங்களை தவிர்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாணவர் கல்லூரியை தேர்வு செய்துவிட்டு 7 நாட்களுக்குள் அவர் கல்லூரியில் சேர்ந்துவிட்டார் என கண்காணிக்கவும், அவர் கல்லூரியில் சேரவில்லை என்றால் மீனுடன் 2-ம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் அந்த காலியிடம் நிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவு கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அவர்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.