திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான சுவாமி தரிசனத்திற்கு மெய்நிகர் சேவையில் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபஅலங்காரம் சேவை டிக்கெட் முன்பதிவு செய்து தரிசன டிக்கெட்டுகள் பெறும் கோட்டா இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் மெய்நிகர் சேவைக்கான டிக்கெட் பெற்று இந்த மாதம் நான்கு நாட்களுக்கான சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும்படி பக்தர்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.