திருப்பூர்: திருப்பூர் போயம்பாளையத்தில், வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இரவில் மலரக்கூடிய பிரம்ம கமல பூவை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு ரசித்தனர். திருப்பூர் - போயம்பாளையம், கங்கா நகரில் அஸ்வின் என்பவரது வீட்டில், வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரவில் மலரக்கூடிய பிரம்ம கமல பூ மலர்ந்திருந்தது.
இந்த பூவானது மூன்று விதமான இதழ்களைக் கொண்டு வெண்ணிறத்துடன் அழகாக காணப்பட்டது. இந்த மலரானது பொதுவாக ஜீலை மாதத்தில் இரவில் மலர்ந்து சில மணி நேரங்களில் குவிந்து விடும். இந்த பிரம்மகமல பூவை, நிஷாகந்தி என்றும் அழைப்பர். இந்த அபூர்வ வகை பூவை அப்பகுதி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு ரசித்துச் சென்றனர்.