பவானி: ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னை செல்வதற்காக காரில் ஈரோடு ரயில் நிலையம் புறப்பட்டார். காரை, கோபி கணபதிபாளையத்தைச் சேர்ந்த கார்த்தி (35) ஓட்டினார். பவானி அந்தியூர் ரோட்டில் வாய்க்கால்பாளையம் அருகே கார் சென்றபோது அங்கிருந்த வளைவில் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் கார் டிரைவர் காயம் அடைந்தனர். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் எம்எல்ஏ கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடத்திய சோதனையில் மார்புக்கூட்டில் 4 எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.