×

ராகுல் தாக்கு கேள்விக்கு பதில் அளிக்க அஞ்சும் மன்னர் மோடி

புதுடெல்லி: ‘கேள்விகளுக்கு பதில் அளிக்க பயப்படும் ‘மன்னர்’ மோடி, தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட 57 எம்பிக்களை கைது செய்து, 23 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘சிலிண்டர் விலை ரூ.1053 ஆக உயர்த்தியது ஏன்? தயிர் மற்றும் தானியங்கள் மீது ஜிஎஸ்டி ஏன்? கடுகு எண்ணெய் விலை ரூ.200? வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய 57 எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். 23 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஜனநாயக கோயிலில் கேள்விகளுக்கு மன்னராகிய பிரதமர் மோடி பதில் சொல்ல பயப்படுகிறார். சர்வாதிகாரிகளை எப்படி எதிர்த்து போராடுவது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்’ என்று பதிவிட்டுள்ளார்.


Tags : King Modi ,Rahul Thak , Rahul Thakku, Anjum King Modi,
× RELATED பஞ்சாப்பில் ராகுல் தாக்கு ரூ.15 லட்சம் தருவது பற்றி பிரதமர் மோடி ‘கப்சிப்’